டாக்கா: வங்கதேசம் – விண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில், விண்டீஸ் வெல்வதற்கு 395 ரன்களை இலக்கு நிர்ணயித்துள்ளது வங்கதேச அணி.

முதல் இன்னிங்ஸில் 430 ரன்களைக் குவித்தது வங்கதேசம். ஆனால், தனது முதல் இன்னிங்ஸில் பதிலாக 259 ரன்களை மட்டுமே எடுத்து பின்தங்கியது விண்டீஸ் அணி.

முதல் இன்னிங்ஸில் 171 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய வங்கசேத அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.

இதன்மூலம், விண்டீஸ் அணி முதல் டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு, 395 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது வங்கதேசம். தற்போது, 4வது நாள் ஆட்டத்தின் மூன்றாவது செஷன் நடைபெற்று வருகிறது.

சவாலான இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள விண்டீஸ் அணி, தற்போதைய நிலையில், விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை எடுத்து ஆடிவருகிறது. விண்டீஸ் அணி தாக்குப்பிடித்து ஆடி டிரா செய்யுமா? அல்லது அதிரடியாக ஆடி வெற்றிபெற முயலுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.