சென்னை: தமிழகத்தில் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ள டிவிட்டில்,  தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு (ம) விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.  இச்சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.