நடிகர் சூர்யா அளித்துள்ள பேட்டியில் “எனது படங்களை ரிலீஸ் தேதியில் பார்ப்பதற்கு எனக்கு கூச்சமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

“நூறு நாள் ஓடி, வெற்றி பெற்ற பிறகே என படங்களை பார்ப்பேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனது சில படங்களை இப்போது பார்க்கும் போது, இதைவிட நன்றாக நடித்திருக்கலாம் என பல முறை நினைத்துள்ளேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

“உங்கள் படங்கள் மீண்டும் தயாராகும் பட்சத்தில், உங்களது எந்த படத்தில் நடிக்க விருப்பம்?” என கேட்டபோது, “எனது படங்கள் மீண்டும் எடுக்கப்படுவதில் உடன்பாடு இல்லை” என அவர் தெரிவித்தார்.

“பத்தாம் ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெறும், ஒருவன், பிளஸ் 2 தேர்வு எழுதி பாஸ் ஆன ஒருவன், மீண்டும் அதே தேர்வை எழுத விரும்புவானா?” என எதிர் கேள்வி எழுப்பிய சூர்யா “ஒரு படத்தில் நடித்து விட்டோமா? அந்த படத்தை விட, அடுத்த படம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் நான் நினைப்பேனே தவிர, பழைய சினிமாவை ‘உல்டா’ செய்வதில் ஆர்வம் கிடையாது” என சூர்யா தெரிவித்தார்.

– பா. பாரதி