முத்தின கத்தரிக்காய் இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் கடமையை செய் என்ற படத்தில் நடிக்கிறார் எஸ்ஜே சூர்யா.

இத்திரைப்படத்தை நஹார் பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

எஸ்.ஜே.சூர்யாக்கு ஜோடியாக யாஷிகா ஆனந்தும் நடிக்கும் இத்திரைப்படத்தில் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள்.

வேங்கட் ராகவன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.