சென்னை: தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கிராமசபைக் கூட்டத்திற்காகச் சென்றிருந்த குண்ணம் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்திற்கு நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.

அதன் பிறகு எதுவுமில்லை. தமிழகம் முழுவதும் அடிக்கல்லோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை? ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? யார் பதில் சொல்வார்கள்? என்று குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel