தேவராட்டம்’ படத்தைத் தொடர்ந்து, தமிழில் உருவாகி வந்த ‘முஃப்தி’ ரீமேக்கில் கவனம் செலுத்தி வந்தார் கவுதம் கார்த்திக்.

தற்போது எழில் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் பார்த்திபனுடன் நடித்து வருகிறார் கவுதம் கார்த்திக்.

இந்நிலையில், கவுதம் கார்த்திக் நடிக்கவுள்ள புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமுக இயக்குநர் தக்‌ஷிணாமூர்த்தி ராமர் இப்படத்தை இயக்கவுள்ளார். த்ரில்லர் பாணியில் மதுரையைச் சுற்றிப் படமாக்கப்பட உள்ளது.

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.