விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்நிலையில் நடிகை சித்ராவின் உடற்கூறு ஆய்வு முடிந்துள்ளது. மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பலரும் சித்ரா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், சித்ராவின் மரணத்திற்கு பின்னால் மர்மமான காரணம் இருப்பதாகவும், இது கொலையா தற்கொலையா போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.

தற்போது சித்ராவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் முதல்கட்டமாக ‘சித்ராவின் மரணத்துக்கு தற்கொலைதான் காரணம்’ என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.