கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த நாட்டாமை திரைப்படத்திற்கு கதை திரைக்கதை உள்ளிட்டவற்றை எழுதியவர் ஈரோடு சௌந்தர்.

மேலும் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்திலும் இவர் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

நேற்று உடல்நல குறைவால் காலமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 63 வயதான அவர் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

ஈரோடு சௌந்தரின் திடீர் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.