தமிழ் சினிமாவிற்காக தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் , ”இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நீங்கிய பின்பு, தமிழக அரசு திரைப்பட விருதுகள் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.