கோவை: மார்க்சிஸ்ட் கட்சியின்  முன்னாள் எம்எல்ஏ  எம்எல்ஏ தங்கவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், குணமடைந்துவருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அவர்கள் உயிர் பிழைப்பதில் சிரமம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கே.தங்கவேல் கொரோனா தொற்று காரணமாக காலமானார்.

திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக  கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  காலமானார்.

இவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.