Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
ஆன்மிகம் தமிழ் நாடு

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் தர்ப்பணம், அக்னி தீர்த்தம் உள்பட தீர்த்தங்களில் புனித நீராடவும் தடை!

Sep 13, 2020

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி, அன்றைய தினம் பக்தர்கள் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தர்பபணம் செய்வதற்கும்,  அக்னி தீர்த்த கடலில் நீராடுவது உள்பட புனித தீர்த்தங்களில் நீராடவும்   தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வரும் 17ந்தேதி மகாளய அமாவசை வருகிறது. அன்றைய தினம், இந்துக்கள்,  மறைந்த முன்னோர் களுக்கு செய்ய வேண்டிய  கடமைகளை தர்பணம் செய்து மகிழ்விப்பர்.

பித்ருக்களுக்கு, புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு என்று இந்து சமயம் கூறுகிறது.  இதனால்,   நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு படையெடுத்து வருவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக,  அக்னி தீர்த்த கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பணம் செய்யவும், அக்னி தீர்த்தம் உள்பட கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும் தொடர்ந்து தடை இருந்து வருகிறது.

கொரோனா ஊடங்கில் இருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கோயில்கள் திறந்து, கடும் கட்டுப்பாடு களுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மகாளய அமாவாசை அன்று, தர்ப்பணம் கொடுக்கவோ, புனித நீராடவோ தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய   ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது, வருகிற 17-ந் தேதி புரட்டாசி மகாளய அமாவாசை நாளாகும். அன்று வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி தர்ப்பண பூஜை செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்திற்கு வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர். தரிசனத்திற்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி கோவிலுக்குள் ஒருவர் பின் ஒருவராக சென்று வரவேண்டும்.

பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் அன்று ராமேசுவரம் கோவிலில் கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LlZPVG1oVXRZeW9J வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..#thiruppugazh
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா?

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu #kathirkaamam
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா? #thiruppugazh #kathirkaamam​
Load More... Subscribe

Post navigation

நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு! தமிழகத்தில் 1,17,990 மாணவர்கள் எழுதுகிறார்கள்
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் 77.7%, சென்னையில் 91%

Related Post

தமிழ் நாடு

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள்! கொடிஅசைத்து அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழ் நாடு

விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது திமுக ஆட்சி – தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ் நாடு

சலசலப்பை ஏற்படுத்தி உள்ள பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம்: ! தனக்கு தெரியாது என்கிறார் செல்வபெருந்தகை…

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer