காஞ்சிபுரத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சியர், அதிகாரிகள் மற்றும் சிறு, குறு தொழிற்சாலை பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் சுயஉதவி குழு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், மாநில அரசு கொரோனாவை தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று இருக்கும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழு அந்த பகுதிக்கே சென்று அங்குள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அறிகுறி இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து அதில் நோய் தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நோய் தொற்று குறைய தொடங்கி இருக்கிறது. இது நல்லமுறையில் குறைந்தால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கும்.
காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள பஸ் நிலையம், காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.