சென்னை: வரும் 15ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம், அதற்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், யூஜிசி அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இந்த மாதம் 30ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவித்தது.

இதையடுத்து, அனைத்து மாநிலங்களும் அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளன. இந் நிலையில் உயர்கல்வித்துறையானது, வரும் 15ம் தேதி முதல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

செமஸ்டர் தேர்வுகள் வழக்கம் போல் 3 மணி நேரம் நடைபெறும். எழுத்து தேர்வு, ஆன்லைன் தேர்வு ஒரே நேரத்தில் நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.