மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’.

இதுவரை ஜெயம்ரவியின் படங்களில் தனி ஒருவனுக்கென தனி இடம் என்றும் உண்டு. ரசிகர்களின் ஆதரவைப் பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகளாகிறது.

இந்நிலையில் அந்த படத்தில் நடித்திருந்த ஹரிஷ் உத்தமன் இது குறித்து தனது வாழ்த்துகளை இயக்குனர் மோகன் ராஜாவுக்கு தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலளித்த இயக்குனர் மோகன் ராஜா ‘தனி ஒருவன் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி,… விரைவில் தனி ஒருவன் 2 வரும்’ எனத் தெரிவித்துள்ளார்.