சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 88 பேர் பலியாக மொத்த உயிரிழப்பு 3,600ஐ கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மொத்த பாதிப்புகள் 5 ஆயிரத்தை கடந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,107 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஆகையால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 96,438 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 3,659 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 88 பேரில், தனியார் மருத்துவமனையில் 23 பேரும், அரசு மருத்துவமனையில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழப்பு  59வது நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.