டெல்லி: கடந்த ஆண்டு (2020)  நாடு முழுவதும  9,849 இணையதள கணக்குள் முடக்கம் செய்யப்பட்டதாக, மக்களவையில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

மக்களவையில் நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, உறுப்பினரின் கேள்விக்கு எழுத்துமூலம் பதில் அளித்த மத்திய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நாட்டின் இறையாண்மை மற்றும் பொது ஒழுங்கிற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட  9,849 சட்டவிரோத இணையதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கையானது  தகவல் தொழில்நுட்பவியல் 69A சட்டத்தின்படி எடுக்கப்பட்டு இருப்பதாகவும்,  பெரும்பாலான இணையதள புகார்கள்,  சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules, 2021 சட்டத்தின்படி தீர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே  கடந்த 2017-ம் ஆண்டு 1,385 கணக்குகளும்,, 2018-ம்  ஆண்டு 2,799 கணக்குகளும், 2019-ம் ஆண்டு 3,603  இணையதள கணக்குகளும்.  முடக்கப்பட்டுள்ளது. மூடக்கப்பட்ட இணையதள கணக்குகளின் எண்ணிக்கை கடந்த 2019-ம் ஆண்டைவிட 170 சதவீதம் அதிகம்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.