புதுடெல்லி:
புதுடெல்லியில் இன்று சர்வதேச போலீஸ் அமைப்பின் பொது சபை கூட்டம் துவங்குகிறது.

வரும் 21-ஆம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில், 195 நாடுகளின் மத்திய போலீஸ் அமைப்பின் தலைவர்கள், அமைச்சர்கள் என, 2,000 பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.