ஃபிரோசாபாத்

டந்த 1981 ஆம் ஆண்டு நடந்த 10 தலித்துகள் கொலை வழக்கில் 90 வயது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது/

கடந்த 1981 ஆம் ஆண்டு உத்தர பிரதேசம் மெயின்புரி மாவட்டத்தின் சாதுபூர் கிராமத்தில் நியாயவிலைக்கடை உரிமையாளர் ஒருவர் மீது, தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். புகார் அளித்தவர் குடும்பத்தை உயர் வகுப்பைச் சேர்ந்த அந்த நியாயவிலைக்கடை உரிமையாளர், பழிவாங்க முடிவு செய்தார். அவர் அனர் சிங் யாதவ் என்ற கொள்ளை கும்பல் தலைவனிடம், புகார் கொடுத்த குடும்பத்தினரைச் சுட்டுக் கொல்லும்படி கூறியுள்ளார்.

புகார் கொடுத்த தலித் குடும்பத்தின் வீட்டுக்குள் புகுந்து ஒரு கும்பல் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி வீட்டின் சமையல் அறையில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்த சிறுமி, குழந்தைகள் உட்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.பிரேம்வதி என்னும் பெண் மட்டும்  காலில் குண்டுக் காயத்துடன் உயிர் பிழைத்தும் அவரின் குழந்தைகள் துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டனர்.

இதையொட்டி 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இந்த கொலை வழக்கு மெயின்புரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பிறகு மெயின்புரி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஃபிரோசாபாத் உருவாக்கப்பட்ட போது, கொலை வழக்கைப் பதிவு செய்த சிகோஹாபாத் காவல் நிலையம் ஃபிரோசாபாத் எல்லைக்குள் வந்தது.  எனவே இந்த கொலை வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு பிரோசாபாத் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்ததால், குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேர் இறந்து விட்டனர். கங்கா தயாள் என்பவர் மட்டும் உயிருடன் உள்ளார். ஜாமீனில் இருந்த இவருக்கு தற்போது வயது 90. கடந்த மே 31-ம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் கங்கா தயாளுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதித்து நீதிபதி ஹர்விர் சிங் உத்தரவிட்டுள்ளார்.