சென்னை

சென்னை நகரில் கொரோனா உறுதியான நபர்களில் 90% பேருக்கு அறிகுறிகள் இல்லை.

தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.

இதில் ராயபுரத்தில் 164 பேரும் திரு வி க நகரில் 128 பேரும் கொரோனாவால் பதிக்கபட்டுளன்ர்.

கடந்த இரு வாரங்களில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி இது குறித்து மக்களுக்கு ஒரு எச்சரிக்கை அளித்துள்ளது.

அந்த எச்சரிக்கையில் சென்னை நகரில் கொரோனா பாதிப்பு அடைந்தோரில் 90% பேருக்கு எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.