ணியாச்சி

நேற்று சென்னையில் இருந்து நெல்லைக்குச் சென்ற வந்தே பரத் ரயில் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் 9 பெட்டிகள் சேதம் அடைந்துள்ளன.

 

இந்தியா முழுவதும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலம் பொதுமக்கள் குறிப்பிட்ட தொலைவை விரைவாகச் சென்றடைய முடிகிறது.

சென்னையில் இருந்து தாம்பரம் விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் வழியாக நெல்லைக்கு அதாவது தென் மாவட்டங்களுக்கு வந்தே பரத் ரயில் சேவை கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த வந்தே பாரத் ரயில் சேவை பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயண நேரம் காரணமாகப் பயணிகள் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

நேற்று சென்னையில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்குப் புறப்பட்டது. இந்த ரயில் இரவு 10.30 மணியளவில் வாஞ்சி மணியாச்சி அருகே சென்று கொண்டிருந்தது

அப்போது சில மர்ம நபர்கள் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் ரயிலின் 9 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.