சென்னை:

மிழகத்தில் தொழில் தொடங்க, தொழில் பூங்காக்கள் மூலம் 8 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வழங்க அரசு தயாராக இருக்கிறது என்று தமிழக துணைமுதல்வர் ஓபிஎஸ் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க-இந்திய தொழில் முதலீட்டாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய  துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியில் புதிய பொற்காலம் நிலவுகிறது என்றும் கூறினார்.‘

சென்னை தலைமை செயலகத்தில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன், அமெரிக்க-இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அவர்களுடன் பேசிய துணைமுதல்வர்,  தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்  தொழிற் பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, மற்றும் மருத்துவ பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக வும், இதில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் காலியாக இருப்பதாகவும், அந்த இடங்களில் புதிய தொழில்களை தொடங்கலாம் என்றார்.

மேலும்,  தமிழகத்தில் முதலீட்டாளருக்கு ஏற்ற சூழலை மேம்படுத்தவும் தொழில் வளர்ச்சி பெருக வும் துறை ரீதியாக கொள்கை முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றும் கூறினார்.