மும்பை

காராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.   தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த தொற்று உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.  இந்த தொற்று இந்தியாவிலும் காணப்படுகிறது.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இவர்கள் வெளிநாடுகளில் இருந்து மகாராஷ்டிராவுக்கு வந்துள்ளனர்.  இதுவரை மகாராஷ்டிராவில் மொத்தம் 28 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.