திரிபோலி

லிபியாவில் இரு அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததையொட்டி 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடும் புயலால் லிபியாவில் இரு அணைகள் உடைந்து  அந்த வெள்ள நீரில் சிக்கி 4 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் வரை உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

டெர்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரு அணைகள் புயல் காரணமாக உடைந்தது தொடர்பாக, நீர்வளத் துறையைச் சேர்ந்த 8 அதிகாரிகளைக் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக. தெரிவிக்கப்பட்டுள்ளது/

கைதானவர்களில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள் மற்றும் ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். அவர்கள் மீது தவறான மேலாண்மை, அலட்சியம், தவறான முடிவுகள் போன்றவற்றால் இந்தப் பேரிடருக்குக் காரணமாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.