டில்லி

கனடா மற்றும் கனடா இடையே ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது என கனடா நாட்டின் துணைத் தளபதி தெரிவித்துள்ளார்.

தற்போது டில்லியில் இந்தோ-பசிபிக் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கனடா ராணுவத்தின் துணை தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் பங்கேற்றுள்ளார்.

இந்தியா மற்றும் கனடா இடையே காலிஸ்தான் விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையிலான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.

பீட்டர் ஸ்காட் செய்தியாளர்களிடம்,

“கனடா மற்றும் இந்தியா இடையிலான தூதரக மோதல்கள் இந்தோ-பசிபிக் மாநாட்டில் எங்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நாங்கள் ராணுவ ரீதியிலான உறவுகளை மேம்படுத்தவே நாங்கள் இங்கு இருக்கிறோம். 

இது குறித்த மற்ற விவகாரங்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்படும். இந்தியா-கனடா இடையிலான ராணுவ உறவில் பாதிப்பு ஏற்படாது” 

என்று தெரிவித்துள்ளார்.