மதுரை:

துரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, அரிட்டாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள், 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிற்து.

தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்றுமுதன்  நடைபெற்று வருகிறது. இதில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக சில பகுதிகளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் மாநில தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தி வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த  உள்ளாட்சி தேர்தலில் முதியவர்கள் வரை இளைஞர்கள், இளைஞிகள் என ஏராளமானோர் வெற்றி பெற்றுள்ளனர். அதுபோல மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, அரிட்டாப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 79 வயது மூதாட்டி வீரம்மாள், 195 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.