ஈரான்,

மெரிக்காவில் இஸ்லாமிய நாட்டை சேர்ந்தவர்கள் குடியேற தடை விதிக்கப்போவதாக புதிய அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதன் காரணமாக ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க மாட்டேன் என ஈரான் நாட்டு நடிகை அறிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு தடை விதிக்கும் உத்தரவை அதிபர் டிரம்ப் பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகளிடையே கடும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

நடிகை டரானே அலிடூஸ்ட்டி

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பழைய உத்தரவுகளை தடை செய்தும், புதிய உத்தரவுகளை பிறப்பித்தும் அதிரடி நடவடிக்கை களில் ஈடுபட்ட வருகிறார்.

ஒபாமா கொண்டு வந்த காப்பீடு திட்டம் ரத்து, மீண்டும் சித்ரவதை தண்டனை போன்ற திட்டங்களை கொண்டு வர டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதுபோல் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான், சிரியா, சூடான், ஈராக், லிபியா, சோமாலியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறுவதற்கும் தடை விதிக்கும் உத்தரவில் அதிபர் டிரம்ப் விரைவில் கையெழுதிட உள்ளார்.

இதுகுறித்து,  ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை டரானே அலிடூஸ்ட்டி என்பவர், டிரம்பின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு  எதிர்ப்பு தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்க புதிய கட்டுபாடுகளை விதிக்கும் அதிபர் டெனால்டு டிரம்பின் இந்த செயல் மதவாத அடிப்படையிலானது. இந்த நடவடிக்கை கலாச்சார விழாக்களுக்கு பொருந்தினாலும், பொருந்தாவிட்டாலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்கர் விழாவில் பங்கேற்க மாட்டேன், என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.