சென்னை: தமிழ்நாட்டு மக்களுக்காக 7 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடங்கப்படு உள்ளதாகவும், இது திமுக அரசின் சாதனை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.3,511.13 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.3,511.13 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.1267.62 கோடி மதிப்பீட்டிலான 10 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சென்னை குடிநீர் வாரிய அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.47 இலட்சம் மதிப்பிலான 5 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 5.2.2026 தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 2378.30 கோடி ரூபாய் செலவில் 9 முடிவுற்ற பணிகளையும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 635.30 கோடி ரூபாய் செலவில் 22 முடிவுற்ற பணிகளையும்;
நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 237.04 கோடி ரூபாய் செலவில் 62 முடிவுற்ற பணிகளையும், பேரூராட்சிகள் இயக்குநரகத்தின் சார்பில் 174.45 கோடி ரூபாய் செலவில் 27 முடிவுற்ற பணிகளையும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 86.04 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற 63 பணிகளையும், திறந்து வைத்தார்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 335.62 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 8 புதிய திட்டப் பணிகளுக்கும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 932 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 2 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி, சென்னை குடிநீர் வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 5 வாகனங்களை அலுவலர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்களை திறந்து வைத்தல்
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், இராசிபுரம் நகராட்சி 8 பேரூராட்சிகள் மற்றும் இராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், எலச்சிப்பாளையம், மல்லசமுத்திரம், பரமத்தி ஆகிய 7 ஒன்றியங்களுக்குட்பட்ட 1,070 ஊரகக் குடியிருப்புகள் மற்றும் 11 ஊராட்சிகளுக்கு 1,138.41 கோடி ரூபாய் செலவிலான 2 கூட்டுக் குடிநீர் திட்டங்கள்.
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஒன்றியங்களை சார்ந்த 363 ஊரகக் குடியிருப்புகளுக்கு 515.72 கோடி ரூபாய் செலவிலான கூட்டு குடிநீர் திட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மற்றும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள செருக்கனூர் மற்றும் 114 ஊரகக் குடியிருப்புகளுக்கு 44.58 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தைச் சார்ந்த கோவளம் மற்றும் 10 ஊரகக் குடியிருப்புகளுக்கு 13.62 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியத்தை சார்ந்த கடுக்கரை, காட்டுப்புதூர் மற்றும் திடல் ஊராட்சிகளில் உள்ள 24 ஊரகக் குடியிருப்புகளுக்கு 7.06 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம், திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்தை சார்ந்த வடசேரி மற்றும் 17 குடியிருப்புகளுக்கு 4.95 கோடி ரூபாய் செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம்;
என மொத்தம் 1,724 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் 11 இலட்சத்து 60 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 7 கூட்டுக் குடிநீர் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
முடிவுற்ற பாதாள சாக்கடைத் திட்டங்களை தொடங்கி வைத்தல்
மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சி குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளுக்கு 591.14 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்கு 62.82 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டம்
என மொத்தம் 653 கோடியே 96 இலட்சம் ரூபாய் செலவில்
4 இலட்சத்து 49 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையிலான 2 பாதாள சாக்கடைத் திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தல்
குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள்
வளசரவாக்கம், சோழிங்கநல்லூர் (செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை) ஆகிய பகுதிகளில் 74 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவிலான குடிநீர் வழங்கல் திட்டப்பணிகள்
பாதாள சாக்கடை திட்டப்பணிகள்
சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 68 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் சோழிங்கநல்லூரில் நாளொன்றுக்கு 36 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
அண்ணாநகர் மண்டலம், வில்லிவாக்கத்தில் 17 கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
தண்டையார்பேட்டை மண்டலம், கொடுங்கையூரில் 45 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட நாளொன்றுக்கு 110 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்.
மணலி, ஆலந்தூர் (முகலிவாக்கம்), பெருங்குடி (பள்ளிக்கரணை), மற்றும் சோழிங்கநல்லூர் (உத்தண்டி, ஒக்கியம்-துரைப்பாக்கம்) ஆகிய மண்டலங்களில் 188 கோடியே 7 இலட்சம் ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்.
மாதவரம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் பொருட்டு 106 கோடி 42 இலட்சம் செலவில், பாடி மேம்பாலத்திலிருந்து கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள்.
தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மற்றும் ஆலந்தூர் மண்டலங்களில் 134 கோடி 33 இலட்சம் செலவில், கழிவுநீர் உந்து நிலையங்கள் மாற்றியமைக்கப்பட்ட பிரதான கழிவுநீர் உந்து குழாய்கள் உள்ளிட்ட கழிவுநீர் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள்.
என மொத்தம் 635 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 22 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நகராட்சி நிருவாகத் துறை சார்பில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
தஞ்சாவூர், ஒசூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சிகளில், ரூ.15.02 கோடி செலவில், புதிய வகுப்பறைகள், ஆய்வு கூடங்கள், கழிவறைகள், சுற்றுசுவர் அமைக்கும் பணிகள், நுண்ணுயிர் செயலாக்க மையங்கள், அறிவியல் பூங்கா, புதிய வணிக வளாகம் உள்ளிட்ட பணிகள்
ரூ.222.02 கோடி செலவில், ஆம்பூர், கம்பம், குடியாத்தம், காங்கேயம், பவானி, வால்பாறை, எடப்பாடி, பண்ருட்டி, பல்லடம், மேட்டுபாளையம், சீர்காழி, ராணிப்பேட்டை, திருச்செந்தூர், விழுப்புரம், வாணியம்பாடி, இராசிபுரம், வானூர், அரக்கோணம், மன்னார்குடி, அரவக்குறிச்சி, குமாரபாளையம், போடிநாயக்கனூர்;
தருமபுரி ஆகிய நகராட்சிகளில் பூங்கா, குடிநீர் அபிவிருத்தி பணிகள், வணிக வளாகம் அமைத்தல், புதிய பேருந்து நிலையங்கள், பேருந்து நிலையங்களை புதுப்பித்தல், வார சந்தைகள், அறிவுசார் மையங்கள், தினசரி நாள் அங்காடி, புதிய வகுப்பறைகள், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், இயற்கை உர ஆலைகள் அமைக்கும் பணிகள்.
என மொத்தம் 237 கோடியே 04 இலட்சம் ரூபாய் செலவில் 62 முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பேரூராட்சிகளின் இயக்குநரகத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல்
கேத்தி, ஏரல், திருவைகுண்டம், உத்திரமேரூர், கிருஷ்ணராயபுரம், சூலூர், திருமயம், பாலக்கோடு, அரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், அந்தியூர், கோபி, பவானிசாகர், மொடக்குறிச்சி, பெருந்துறை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள ஆரம்ப சுகாதார துணை நிலையங்கள், புதிய அலுவலகக் கட்டடங்கள், புதிய பேருந்து நிலையங்கள், குடிநீர் அபிவிருத்தி பணிகள், கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், பொது சுகாதார வளாகங்கள், புதிய சமுதாய கூடங்கள்;
என மொத்தம் 174.45 கோடி ரூபாய் செலவில் 27 முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]