சென்னை:
மிழகத்தில் இன்று 4,329  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனாவால் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.   கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,357  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. இதனால்  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  58,378 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 4,329 பேரில், 2,082 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் மீதமுள்ளவர்கள் மற்ற மாவட்டங்களையும், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள்.
சென்னையில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்தது.  40,111 பேர் இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  996 பேர் உயிரிழந்துள்ளனர்.. தற்போது சென்னையில் 23,581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியாக விவரம்:
சென்னை – 2,082

செங்கல்பட்டு – 330
மதுரை – 287
திருவள்ளூர் – 172
தி.மலை – 151
வேலூர் – 145
தேனி – 126
காஞ்சிபுரம் – 121
சேலம் – 99
ராணிப்பேட்டை – 90
க.குறிச்சி – 85
ராமநாதபுரம் – 73
விருதுநகர் – 65
சிவகங்கை – 53
குமரி – 53
திருச்சி- 47
நெல்லை- 41
கோவை- 36
விழுப்புரம் – 33
திருப்பத்தூர் – 33
தூத்துக்குடி – 27
கடலூர் – 20
புதுக்கோட்டை – 18
திருவாரூர் – 17
நாகை – 17
திண்டுக்கல் – 17
ஈரோடு – 14
கிருஷ்ணகிரி – 14
தர்மபுரி – 14
தஞ்சை – 13
திருப்பூர் – 5
தென்காசி – 4
கரூர் – 4
நாமக்கல் – 4
நீலகிரி – 1