டெல்லி: கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த பயன்படுத்தப்பட்ட 60 சதவீதம் ரயில் பெட்டிகள் மீண்டும் பயணிகள் சேவைக்காக மாற்றப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக கடந்த மே 1 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதற்காக 2,000 ஷராமிக் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 5321 ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டன. அதற்காக அந்த பெட்டியின் நடுபடுக்கை  அகற்றப்பட்டு மாற்றம் செய்யப்பட்டது.
அவ்வாறு மாற்றப்பட்ட தனிமை வார்டு பெட்டிகளில் இதுவரை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படாதவற்றை சிறப்பு ரயில்களாக இயக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனிமை வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளில் 60 சதவீதத்தை ஷராமிக் சிறப்பு ரயில்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, 3120 பெட்டிகளை சிறப்பு ரயில்களில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது என்று  தெரிவித்துள்ளது.