ன்னியாகுமரி

லங்கையை சேர்ந்த 6 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து இந்திய மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்து வருகின்றனர்.  மேலும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசால் ஏலம் விடப்படுகிறது.   அடிக்கடி இந்த சம்பவம் நிகழ்வதால் மீனவர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி கடல் பகுதியில் இந்தியக் கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.   அப்போது 6 இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்துக் கொண்டு இருனஹர். இதையொட்டி இந்திய கடற்படையினர் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.