புதுடில்லி: ராஜஸ்தானில் உள்ள ஆறு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த பின்னர் 3ம் தேதி முறையாகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.

ஆறு எம்.எல்.ஏக்களில் உதய்பூர்வதியைச் சேர்ந்த குடா, பரத்பூரைச் சேர்ந்த வாஜிப் அலி, நாட்பாயைச் சேர்ந்த ஜோகிந்தர் அவானா, ஆல்வாரைச் சேர்ந்த சந்தீப் யாதவ், கிஷன்கர்பாஸைச் சேர்ந்த தீப்சந்த் கெரியா, கரௌலியைச் சேர்ந்த லகன் சிங் ஆகியோர் அடங்குவர்.

முறையாக கட்சியில் சேர்ந்தவுடன், எம்.எல்.ஏ ரன்வீர் சிங் குடா கூறியதாவது:  “சோதனைக் காலங்களில் கட்சிக்கு காங்கிரசுக்கு உதவ நான் அனுமன் போல வலுவாக நிற்பேன். 2008 ல் கூட, ஆறு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் காங்கிரசில் சேர்ந்தனர்,”என்று அவர் மேலும் கூறினார்.

இந்த ஆறு எம்.எல்.ஏக்களும் முன்னதாக ராஜஸ்தானில் அசோக் கெஹ்லோட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வந்தனர். இருப்பினும், செப்டம்பரில், அவர்கள் ராஜஸ்தான் சட்டமன்ற சபாநாயகர் சிபி ஜோஷிக்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர்.

இந்த முறையான கட்சி இணைப்பு, கோட்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 100 குழந்தைகள் இறந்ததற்காக, முதலமைச்சர் அசோக் கெஹ்லாட்டை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பதவி விலகக் கோரியதற்கு மத்தியில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.