சென்னை:
மிழ்நாடு பிரீமியா் லீக் 5-ஆவது சீசன் டி 20 கிரிக்கெட் போட்டிகள் நாளை (ஜூலை 17ம் தேதி ) சென்னையில் தொடங்குகின்றன.

கொரோனா பாதிப்பு எதிரொலியாக ரசிகா்கள் இன்றி முதன்முதலாக போட்டிகள் நடைபெறுகின்றன.இளைஞா்கள் மத்தியில் கிரிக்கெட் ஆா்வத்தை மேலும் தூண்டும் வகையிலும், மாவட்டங்களில் கிரிக்கெட் ஆட்டம் வளரவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் டிஎன்பிஎல் எனப்படும் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

சேப்பாக் சூப்பா் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், லைகா கோவை கிங்ஸ், சேலம் ஸ்பாா்ட்டன்ஸ், மதுரை பேந்தா்ஸ், ரூபி திருச்சி வாரியா்ஸ், ஐடிரீம்ஸ் திருப்பூா் தமிழன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் இடம் பெற்று ஆடுகின்றன.

புதிய கேப்டன்கள், பயிற்சியாளா்கள் என ஒவ்வொரு அணிக்கும் புதிய சவால் காத்துள்ளது. வீரா்களுக்கான குலுக்கல் முடிந்த நிலையில், 5-ஆவது சீசன் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.