சென்னை புளியந்தோப்பு பகுதியில் சுமார் 50 ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி, 5 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் 36 ரவுடிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்துச்சென்று போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 44 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும்  நேற்றிரவு  560 ரவுடிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், 3 துப்பாக்கிகள், கஞ்சா பொட்டலங்கள்,  250 கத்திகள், 3 நாட்டுத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.