சென்னை: தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போா் எண்ணிக்கை  53.74 லட்சம் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2024ம் ஆண்டு   ஏப்ரல் மாத நிலவரப்படி, அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 53 லட்சத்து 74 ஆயிரத்து 116 -ஆக உள்ளது

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மாநிலம் முழுவருதும் அரசு வேலைக்காக பதிவு செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போரின் எண்ணிக்கையானது,  கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி,  53 லட்சத்து 74 ஆயிரத்து 116.

இவர்களில், ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985. பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847. மூன்றாம் பாலினத்தனவா் 284 என  தெரிவித்துள்ளது.

வயது வாரியான விவரம்:

18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரத்து 609 பேர்.

19 முதல் 30 வயதுவரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 63 ஆயிரத்து 129 பேர்.

31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருப்போர் 16 லட்சத்து 94 ஆயிரத்து 518 பேர்.

46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 537 பேர்.

60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 7 ஆயிரத்து 323 பேர்.

மாற்றுத்திறனாளிப் பதிவுத்தாரர்கள் விவரம்:

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளின் எண்ணிக்கை 1 லட்சத்து 49 ஆயிரத்து 803 பேர். அதில், கை,கால் குறைபாடுடையோரில் ஆண்கள் 76 ஆயிரத்து 260 பேர். பெண்கள் 39 ஆயிரத்து 222. காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 586 பேர். பெண்கள் 4 ஆயிரத்து 582 பேர். பார்வையற்றோர் ஆண்கள் 12 ஆயிரத்து 567 பேர். பெண்கள் 5 ஆயிரத்து 766 பேர். அறிதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடுடையோர்களில் ஆண்கள் 1 ஆயிரத்து 375 பேர். பெண்கள் 445 பேர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.