மாஸ்கோ

ஷ்யாவுக்குள் நுழைய அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட 500 பேருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்ற 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. அமெரிக்கா கூடுதலான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்தது.  தவிர ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா சமீபத்தில் மறுத்தது.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ”அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவினுள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச் உளவு பார்த்ததாகச் சந்தேகத்தின் பேரில் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். இந்த கைது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை அமெரிக்கத் தூதரகம் அணுகியது.  தற்போது அமெரிக்காவின் இந்த கோரிக்கையை மறுப்பதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.