சென்னை:

ருத்துவ படிப்பில் ஓபிசி-க்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு  விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மனுகுறித்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,  என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இதை வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் சென்னை உயர்நீதி மன்றத்தை அணுக உத்தரவிட்டது.

அதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில்,  மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின ருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, திமுக, அதிமு, பாமக மற்றும் தமிழக அரசு சார்பில் ஏராளமான மனுக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று சென்னை  உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.  விசாரணையைத் தொடர்ந்து மனுகுறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி மத்தியஅரசுக்கு உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.