பெல்காவி

ர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 51 பேருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு அதில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

பிரசித்தி பெற்ற பைரேஸ்வர் கரிம்மா தேவி கோவில்  ர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிகட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போது இந்த கோவிலில் வருடாந்திர உற்சவ திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருவிழாவின்போது பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.  எனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட 51 பேர் உடனடியாக அருகில் உள்ள சாவதட்டி மருத்துவமனை மற்றும் பெலகாவி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் அவர்கள் தார்வாட் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.