கோடா, ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கலபனா சோரன் தனது தங்கை என பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

நேற்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அப்போது பிரியங்கா காந்தி,

”மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்பதே காங்கிரசின் கொள்கையாக இருந்து வருகிறது. பாஜக அரசால் நிலையான கொள்கையை கூட வகுக்க முடியவில்லை. பொய்யான அறிக்கைகள் மற்றும் வழக்குகள் மூலம் ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துள்ளனர்.

சோரன் மீது தொடரப்பட்ட வழக்கு உண்மையானது கிடையாது.மக்கள் ஹேமந்த் சோரன் இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர். பிரதமர் மோடி ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டு, தேர்தலில் எளிதில் வெற்றி பெறலாம் என நினைத்திருப்பார்.

இன்று, ஹேமந்த்கு பதிலாக அவரது மனைவி கல்பனா போராடி அனைத்து பிரச்சினைகளையும் சிங்கம் போல எதிர்கொள்கிறார். அவர் இந்தியா கூட்டணியின் திட்டங்களைப் பற்றி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவரை நான் என் தங்கையாகவும், பெண் சக்தியின் அடையாளமாகவும் கருதுகிறேன்.”

என்று உரையாற்றினார்.