ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் தொடா மாவட்டத்தில் 5 லஷ்கர் பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தொடா மாவட்டத்தில் 5 லஷ்கர் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களிடம் இருந்து அதி நவீன துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.