கெய்ரோ: 
கிப்தில் 5 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பெஹெய்ராவின் ஆளுநர் ஹிஷாம் அம்னா ஒரு அறிக்கையில், எகிப்தின் பெஹெய்ரா மாகாணத்தில் உள்ள டாமன்ஹூர் நகரத்தில் ஐந்து மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்ததோடு,  இரண்டு பேர் காயமடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.