சென்னை

மிழக அரசு ஐந்து ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உள்ளது.

தமிழக அரசு இன்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.   அதில் ஐந்து ஐ ஏ எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, “ஐ ஏ எஸ் அதிகாரிகளான அமுதா சென்னை உணவு பாதிகாப்பு முதன்மை செயலாளராகவும்,  காகர்லா உஷா தமிழ்நாடு ஊரக வளர்ச்சி நிதி சேவை முதன்மை செயலாளராகவும், அபூர்வா சிறுதொழில் வளர்ச்சிக் கழக முதன்மை செயலாளராகவும், பாலசந்திரன் தொழிலாளர் நலத்துறை ஆணையராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.   தற்போது தேர்தல் துணை ஆணையராக உள்ள சுதிப் ஜெயினுக்கு முதன்மை செயலாளர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது”  என அறிவிக்கப்பட்டுள்ளது.