CoWIN இணையதள தரவுகள் கசிந்ததை அடுத்து இதில் யார்யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

இதில் அனுமனுக்கு 5 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தவிர, 2016ம் ஆண்டு ஆதார் தரவுகள் நீக்கப்பட்ட பாகிஸ்தான் உளவாளி மெகபூப்புக்கும் 5 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆடு முதல் ஆண்டவன் வரை அனைவருக்கும் தடுப்பூசி போட்டதாக தரவுகளில் இதுபோன்ற தகிடுதத்தங்கள் செய்ததாலேயே நாட்டில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

தவிர, இந்த கணக்குகள் மூலம் எத்தனை ஆயிரம் கோடிகள் வீணடிக்கப்பட்டது அல்லது சுருட்டப்பட்டுள்ளது என்ற கேள்வி பூதமாக எழுந்துள்ளது.

CoWIN செயலி குறித்த விவரம் அரசிடம் இல்லை என்று RTIல் தெளிவுபடுத்திய நிலையில்… தரவுகள் கசிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரிப்பதாக தகவல்…