தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 23, செங்கல்பட்டில் 10, காஞ்சிபுரத்தில் 1, திருவள்ளூர் 1 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது.

கோவையில் 5 பேருக்கும், திருச்சியில் 3 பேருக்கும் சேலத்தில் 2 பேருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தவிர கடலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மொத்தம் 16,858 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 26 ஆண்கள் 21 பெண்கள் என மொத்தம் 47 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

68 பேர் இன்று குணமடைந்த நிலையில் 478 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.