இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராம், தமிழகம், குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு கூடிக்கொண்டே வருகிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் இ 45,720 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,38,635 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 1,129 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கூடுதலாக 444 பேர் கொரோனா வால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் மொத்த உயிரிழப்பு 29,861 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை நோய் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து, 7,82,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் 4,26,167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்ச தொற்று பாதிப்பு காரணமாக தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 3,37,607 பேரும், தமிழகத்தில் 1,86,492 பேரும், உத்தர பிரதேசத்தில் 55,588 பேரும், தெலுங்கானாவில் 49,259 பேரும், ராஜஸ்தானில் 32,334 பேரும், கர்நாடகாவில் 75,833 பேரும், குஜராத்தில் 51,399 பேரும், டெல்லியில் 1,26,323 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.