ஜகார்த்தா: இந்தோனேசியா நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் நேற்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

இந் நிலையில் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிகை 42ஆக உயர்ந்துள்ளது. மேலும் 630க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. சாலைகள், வீடுகள், ஓட்டல்கள், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு கூறி உள்ளது.