சென்னை: தமிழ்நாடு புத்தாண்டு பரிசாக, அரசு ஊழியர்களுக்கு 4சதவிகித அகவிலைப்படை வழங்கியுள்ள நிலையில், அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினை பல்வேறு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து நன்றி மட்டும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வின் மூலம் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (1ந்தேதி) அறிவித்தார். இது அரசு ஊழியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தமிழகஅரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,  பல்வேறு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து, நன்றி மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் 4 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்து, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.