பெட்பர்க்ஹாவ்

ஜெர்மனி  நாட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஜெர்மனிய்ல்ன் மேற்கே வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாகாணத்தில் பெட்பர்க்ஹாவ் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்று உள்ளது. பல செவிலியர்கள் பணியாற்றக் கூடிய இந்த காப்பகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று காயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

விபத்தில், 4 பேர் பலியாகி  58 பேர் காயமடைந்து உள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.