பாட்னா

பீகார் மாநிலத்தில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

டில்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாலையா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரயிலின் (12506) 6 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே நேற்றிரவு சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டன.  இதனால் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.  மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து காயம் அடைந்த பயணிகளை மீட்டு  அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் புறப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றும் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலம் தகவல் தெரிவித்திருந்தது.

6 பெட்டிகள் தரம் புரண்டு விபத்தில் சிக்கி 4 பேர் பலியாகியுள்ளதாகவும் 60 பேருக்கும் மேல் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மீட்புப் பணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மீட்பு பணிகளுக்காக 15 ஆம்புலன்சுகள், 5 பேருந்துகள் மீட்புப்பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும், ரத்த வங்கி திறக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தவிபத்து குறித்து தகவல் அறிய ரயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி

PNBE helpline:- 97714 49971

DNR helpline:- 89056 97493

COMM CNL:- 77590 70004

ARA helpline:- 83061 82542

ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.