metto
சென்னை,
ங்க கடலில் உருவான ‘முதலை’  புயல் காற்றழுத்த மண்டலமாக மாறியதால் நாளை முதல் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே சென்னையில் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரித்தது, பின்னர் புயல் வலுவிலந்துவிட்டது என்று கூறியது. தற்போது மீண்டும் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 24மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அங்கேயே நிலைகொண்டு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24மணி நேரத்தில் வட தமிழகத்திலும், புதுவையிலும் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாகத் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் 4 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வங்க கடலில் உருவான ‘கியான்ட்’ புயல் முதலில் ஆந்திர கடற்கரை நோக்கி நகர்ந்தது. பின்னர் படிப்படியாக வலு இழந்து காற்றழுத்த மண்டலமாக மாறியது. அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது.
தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 240 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்தில் இருந்து 260 கி.மீ. தொலைவிலும், நெல்லூரில் இருந்து 390 கி.மீ. தொலைவிலும் கடலில் மையம் கொண்டுள்ளது.
 
1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மழை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் மதுரை, கோவை போன்ற உள் மாவட்டங்களில் 5 செ.மீ முதல் 10 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
இதே போல் வடக்கு கேரளா பகுதியில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் 31-ந் தேதி முதல் கேரளா விலும் மழை தொடங்கும் 1-ந் தேதி முதல் மழை அளவு அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.