புவனேஸ்வர்

ஒடிசா மாநிலத்தில் 4 குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சந்திரயான்-௩ விண்கலத்தின் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது.

இதனால் விண்வெளி துறையில் இந்தியா சரித்திர சாதனை படைத்துள்ளது.

நிலவின் மேற்பரப்பில் செயற்கைகோள் இறங்கிய நேரத்தில் ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்ட ஆஸ்பத்திரியில் பிறந்த 3 குழந்தைகளுக்கு ‘சந்திரயான்’ என பெயரிடப்பட்டது.

‘விக்ரம்’ லேண்டர் மெதுவாக தரையிறங்கி சாதனை படைத்ததை நினைவுகூரும் வகையில் ஒரு பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகளுக்கு ‘சந்திரயான்’ என்னும் பெயரை பெற்றோர்கள் சூட்டி உள்ளனர்.